Sunday, July 10, 2016

கண்ணன்






அன்புள்ள ஜெ

வெண்முரசின் கிருஷ்ணன் விஸ்வரூபனாக எழுந்து வருகிறான். கிருஷ்ணனைப்பற்றி இத்தனை பெரிய திட்டம் இருந்தமையால்தான் நீங்கள் நீலம் இந்திரநீலம் என்னும் இரு நாவல்களில் பாகவதத்தை முழுமையாக உள்ளெ கொண்டுவந்தீர்க்ள். பாகவதம் உள்ளே வராவிட்டால் இந்திரனுக்கானவேள்வியை கிருஷ்ணன் நிறுத்தல் செய்துவிட்ட செய்தி உள்ளே வராது. இன்றைக்கு நீங்கள் உருவாக்கும் பெரிய சித்திரம் உருவாகியிருக்காது. நுணுக்கமான ஒரு பெரிய கம்பளம் போல நாவலை நெய்துகொண்டெ செல்கிறீர்கள்

அன்புடன்

ஜெயராமன்