Thursday, September 1, 2016

குரல்



அன்பு ஜெமோ சார்,

                          வணக்கம்.இளையயாதவன் முதல் சந்திப்பில்  விதுரரை 'சூதன்' என்று வீழ்த்தும் இடத்தில் மலர்ச்சியுடன் ஒருவரை  இப்படி வெட்டிச்  சரிக்க முடியுமா என வியந்தேன். இப்போதல்லவா தெரிகிறது,அவன் குருவிடமே வலிய சிக்ஸர் விளாசியது. விதுரரெல்லாம் இலகுவான பவுண்டரியே.

                        ஜெமோ சார் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். 'ஹையா எனக்கு ஜெமோசார் பதில் சொல்லிட்டாங்க'  என்ற உவகை  காய்வதற்குள் , அடுத்த வெண்முரசு நாவல் நிகழும் போது 'அர்ஜுனனுக்கு மட்டுமே கீதை சொல்லப்பட்டிருக்க முடியும் ஏன் அப்படி கேட்டாய்' என்று நான் யோசிக்கும் அகக்காட்சி தெரிகிறதே போங்க சார்.
                    நன்றி

அன்புடன்,
இரா.சிவமீனாட்சிசெல்லையா .