Wednesday, November 1, 2017

வடு



அன்புள்ள ஜெ

கிருஷ்ணனின் கால் விரலில் உள்ள அந்த கரியவடு பலமுறை வந்துள்ளது. ஒவ்வொருமுறையும் அதன் அர்த்தம் மாறிக்கொண்டே இருக்கிறது. அது நிஷாதர்களால் அவன் கொல்லப்போவதன் அடையாளம். ஆனால் இப்போது அது அவனுள் இருக்கும் துளி இருட்டு. அந்த இருட்டால்தான் அவன் மானுடனாக ஆகிறான். அதை அவனே வேடிக்கையாகச் சொல்லவும்  செய்கிறான்

“ பிரம்மம் தன்னில் ஒரு குறையை உருவாக்கிக் கொண்டது. அதுவே ஜீவாத்மாக்களாக ஆகியது” என்று. அற்புதமான வரி அது. வேதாந்தத்தில் உள்ள பிரம்மலீலையையே விளக்குகிறது. சாதாரணமாக வந்துசெல்கிறது. ஆனால் பிரலம்பனுக்கு அது புரிந்துவிட்டது

ராமச்சந்திரன்