Thursday, November 2, 2017

கண்ணனின் உதடுகள்



ஜெ

இன்றைய அத்தியாயத்தில் தன் பெயரை கண்ணனின் உதடுகள் உச்சரித்ததை உணர்ந்து பிரலம்பன் கொள்ளும் உளநடுக்கமும் விரிவும் மெய்யான பக்தியின் கணங்கள். இடியோசை தன்பெயரைச் சொன்னதுபோல என அவன் உணர்கிறான். அடுத்து உணரும் வரி முக்கியமானது. ஒவ்வொரு மணற்பருவும் அறியும் கடல். கடல் அறியும் மணற்பரு என அடுத்தவரி. இறைவனுக்கும் முமுட்சுவுக்குமான உறவைச் சொல்லும் அருமையான உவமைகள்


எஸ்.பி.சாரதி