Wednesday, June 6, 2018

சகதேவனின் மறுமுகம்




அன்புள்ள ஜெ


சகதேவனின் கதாபாத்திரம்தான் ஆச்சரியப்படுத்துகிறது. இப்போது போரை முன்னே செலுத்துபவனாகவே ஆகிவிட்டிருக்கிறான். அவன்தான் ஐவரில் வருவது அறிந்தவன். நீர்க்கோலத்தில் சமணமுனிவராக இருந்தவன் அவன். அவன் இப்படிப்பேசுவது ஆச்சரியம். அவன் போர் எப்படியும் நிகழும் என முடிவெடுத்துவிட்டான். ஆகவே அது சிறப்பாக நிகழட்டும் என நினைக்கிறான். நான் எப்போதும் மண்ணிலிருந்து காலை எடுத்ததே இல்லை என அவன் சொல்வது அதை விளக்குகிறது


மாதவ்