Tuesday, May 26, 2015

காண்டவம் பற்றி

அன்புள்ள ஜே எம் 

காண்டவம் பற்றிய உங்கள் குறிப்பு படித்தேன்.  காண்டவம் 5 பாகங்களும் வாசித்தேன். உங்கள் மொழியின் வளமை, அழகு,  நடையின் வேகம்,  தாக்கம்,  கற்பனை,  இமஜெரிசம், சிம்பலிசம், எல்லாம் உள்ளனவே.
மேலும் ஒவ்வொரு  நாவலும் பாரத கதையின் ஒரு அங்கமாகத்தானே அமைகிறது?  காண்டவத்தில் நீங்கள் எண்ணி இருந்த அந்த அங்கம் வேறு நாவலாக வருமா?

சிவா சக்திவேல் 
 
 
அன்புள்ள சிவா
 
காண்டவத்தைக் கைவிடவில்லை. வேறு ஒரு கோணத்தில் வேறு ஒரு தருணத்தில் ஆரம்பிக்கலாம்.
 
ஜெ