Wednesday, May 27, 2015

கடிதங்களில்...

ஜெயமோகன் அவர்களுக்கு,

"ஆனால் இன்று தங்களின் காண்டவம் நாவலாக எழாமை குறித்த பதிவைப் படித்த போது குற்ற உணர்வே மேலிடுகிறது. ஒரு சிறு அளவேனும் என்னுடைய இயலாமையும் இதற்கு காரணமாகிவிட்டதோ என்று!!!"

எனக்கும் இப்படி தோன்றியது. 
காரனம், ஒரு நாள் பதிவு வரவில்லை என்ற உடன் மாலையில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன்.  அந்த கடிதத்தில் கொஞ்சம் சிக்கலாக இருப்பதாகவும்.. தவிர, குழுமத்தில் சத்தமே இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தேன். வழக்கதிர்க்கு மாறாக இரவு 12க்கு இல்லமல் அன்று உங்கள் தளத்தில் மாலை நேரத்தில்லேயே, பதிவு அடுத்த நாள் வரும் என்று ஒரு பதிவிட்டீர்கள்.

பிறகு ஒரு பதிவு, அடுத்த நாள் உங்கள் பதிவு காண்டவம் தொடரவில்லை என்று.
"உங்களின் பதிவில் பதில் கூறும் ஒரு தொனி இருந்தது. அது என்னை மிக மிக சங்கடப் படுத்துகிறது.  மாறாக காத்திருங்கள் வாசகர்களே என்று தோளில் கைபோட்டிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்!!"
இவர் சொல்வது தானே சரி.

உங்கள் பதிவை படித்த அன்று துக்கம் தொன்டையை அடைத்தது. அழ முடியாது... அதணால் பெறிய மனுஷனாக, உங்களை பார்த்து கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லி கடிதம் அனுப்பினேன்.

உங்கள் படைப்பு நீங்கள் குறிப்பிட்டது போல் கட்டு அற்று இருக்க வேண்டும். நாங்கள் கட்டு படுத்தினாலும், நேரம் கட்டு படுத்தினாலும் - மூலையில் கடாசி விட்டு செல்லுங்கள். அப்படி தான் நாங்கள் உங்களை பார்க்க வேண்டும்( இந்த கட்டுபாடு செல்லுபடி ஆகட்டும்! ). அதர்க்கு உங்கள் மீசை முகம் நல்ல தோரனையுடன் இருக்கும்  

300 பெயறும், மேலும் இனையத்தில் தொடறும் லட்சத்திர்க்கும் மேலானவர்களும் காண்டவம் நுழைய காத்திருப்போம்.

நன்றி
வெ. ராகவ்