Sunday, May 10, 2015

ஒரு வெண்முரசு பிரதி



அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம்

பிரயாகை செம்பதிப்பு வாங்கிய முன்னூறில் நானும் ஒருவன்.
விஷயம் அதுவல்ல.

சந்திரசேகர் அவர்கள் இறுதி சடங்கில் பங்கேற்றதை பற்றி படித்தேன். 

ஜெயமோகன் மனம் வழியே அறிந்த காலத்தையும் களத்தையும் கதையையும் வெண்முரசு பயிலும் ஒவ்வொரு வாசகரும் தனது கண்கள் வழியே தரிசிக்கிறான். எழுதப்படாத சொற்களுக்கும் சொல்லப்படாத கதைகளுக்கும் வலிமை அதிகமாய் இருப்பது போல் உறைபிரிக்கப்படாத பிரயாகை சந்திரசேகர் உடனே பயணித்து அவரால் தரிசிக்கப்படும் என நம்புவோம். அவரது பிரயாகை வாசிப்பு அனுபவத்தை நம்மால் அறிய முடியும் என்பதை தவிர.
மண்ணுக்குள் சென்ற ஒருவருடன் உங்கள் எழுத்தும் சென்றது. உங்கள் எழுத்துடனே  ஒருவர் மண்ணுக்குள் சென்றுவிட்டார். இதை விட வேறென்ன வேண்டும் ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும்?

க.ரகுநாதன் 
கோவை