Tuesday, May 19, 2015

குறியீடுகளின் நாவல்

JM Sir,
காண்டவம் குறியீடுகளின் நாவல் என்றாகும் போலிருக்கிறது.
 
தொடக்கமே ஒரு Non-Linear திரைக்கதை போலுள்ளது.
 
ஜரிதையின் மகன்கள் (சத்வன், தமன், ரஜன், சாந்தன், உபசாந்தன் )என்றவுடனேயே ஒரு சிலிர்ப்பு.
 
மகாபலையின் கதையில்,"இளமையிலேயே அறிவு கொண்டிருந்த அக்ஷன் 

" இவ்வரியினை படித்ததும், மனம் மழைப்பாடலுக்குச் சென்றது.பாண்டுவின் இறப்பின் போது, தருமனின் முதிர்ச்சி..

 “உயர்ந்ததை அரிதாக்குவது தெய்வங்களின் விதி என்பதனால் எளிதாக வரும் உயர்ந்தது தெய்வங்களால் விலக்கப்பட்டது என்றே பொருளாகும். இதை நாம் தவிர்ப்பதே முறை.”.. ஒரு கிளாஸிக்

 திரியை……வாரணவதம்..

"நள்ளிரவில் துயிலுக்குள் அவள் பொன்னாலான உடலும் செந்நிறத்தில் பறக்கும் குழலும் நீலநிறக்கால்களும் கொண்ட ஒருவனை கண்டாள். அவன் உடலில் எரியும் அரக்கின் மணமிருந்தது." 

நானும் ஜ்வாலையினைக் கண்டேன்....அருமை.

 வெண்முரசு வாசிக்கத் தொடங்கியதிலிருந்து இதை என்னால் உணரமுடிகிறது.ஒரு வரியினை வாசிக்கும் போதே, அதில் பொதிந்துள்ள மற்ற ஒன்றிற்க்கு மனம் சென்று விடுகிறது.

எண்ணற்ற உதாரணங்கள்....

அன்புடன்,
மகேஷ் (காங்கோ).