Friday, May 8, 2015

உடையும் நகரம்




ஜெ

இந்த கடைசிச் சந்திப்பில் துரியோதனன் என்ன நினைக்கிறான் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் பாண்டவர்களில் தருமனைத்தவிர மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை பீமன் கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கிறான். அது அவன் சுபாவம். அர்ஜுனன் அந்த இடத்திலே உணர்சிவசப்படுகிறான். ஆனால் திருதராஷ்டிரர் தங்களைக்கொல்ல நினைத்ததகத்தான் அவன் நினைக்கிறான்.

ஆகவே உண்மையில் கோபங்கள் போகவில்லை. மேலே ஒரு கண்ணீரால் அதை மறைத்துவிடுகிறார்கள். பிரியும்போது சுமுகமாகப்பிரிய நினைக்கிறார்கள். உண்மையில் இதை அவர்களுக்குத்தெரியாது. அவர்களுடைய மனசுக்குள் இது தெரியும். அறியாமலேயே இதை அவர்கள் நடிக்கிறாகள் அவளவுதான் இல்லையா?

தருமனும்கூட அப்படி நடிக்கிறான் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நாட்டைப்பிரிக்கலாம என்று கேட்டிருந்தால் வேண்டாம் என்று சொல்லக்கூடியவன் அவன் தான். மற்றவர்கள் அப்படி இல்லை

செந்தில்