Tuesday, May 26, 2015

வெண்முரசும் காண்டவமும்

அன்புள்ள ஜெ,

     தாங்கள் முதன் முதலில் காண்டவத்தை அறிமுகம் செய்கையிலேயே தங்கள் மனம் அதில் முழுதும் குவியவில்லை எனத் தோன்றியது. இருப்பினும் ஐந்தாவது அத்தியாயம் முடிந்ததும் ஒரு நாள் இடைவெளி ஏற்பட்டதும் தங்களது எண்ணம் கிட்டதட்ட வெளிப்பட்டே விட்டது. மேலும் ஏன் இந்த நாவலைக் கட்டிக் கொண்டு தொடர்கிறார் என்ற சிறு சந்தேகத்துடனேயே நாவலை அணுக முடிந்தது. நான் இந்த நாவலை நீலத்தில் அரைப் பாதியளவில் முடித்துவிடப் போகும் எண்ணத்தில் இருப்பிர்கள் என்றே நினைத்தேன்.
 
 ஒரு வழியாக நாவலாக இது உருப்பெறவில்லை எனவும், நாவலின் ஒருங்கமைவு ஏற்படவில்லை எனவும் தாங்கள் சொன்னது மிகுந்த மகிழ்வையும் லேசான வெண்முரசின் வருங்காலம் மீதான சந்தேகத்தையும் சேர்த்தே அளிக்கிறது என்பதே நிஜம். நிச்சயம் ஒரு சிறந்த நாவல் வடிவம் தரும் ஒரு பொருள் நோக்கி நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள் என்ற திண்ணிய எண்ணத்துடன் இருக்க நேர்மையான எந்தவொரு வெண்முரசு வாசகனாலும் இருக்க இயலும். நீங்கள் நிகழ்த்தி ! அந்த தீ நிகழும்...

நன்றி
வாழ்த்துக்கள்
கோ.கமலக்கண்ணன்.