Wednesday, May 20, 2015

இலக்கியமும் தத்துவமும்

ஆசிரியருக்கு ,

காண்டவம்  கரையாத கனத்த நாவல் என்பது இந்த 3 அத்தியாயங்களிலேயே தெரிகிறது. பல சமயங்களில் தத்துவ தோற்றத்தில் இலக்கியம் படைத்து  இலக்கியத்திற்காக தத்துவத்தை சமரசம் செய்துவந்த நீங்கள் இம்முறை இலக்கிய தோற்றத்தில் தத்துவத்தைப் படைத்தது  தத்துவத்திற்காக இலக்கியத்தை சமரசம் செய்கிறீர்கள்.

அடிப்படை சக்திகள், அது உருவாகி  தொடரும் விதமும் , parallel குடிகளும், இங்கு பிரதானம் கொள்கிறது. தாய்மை வெம்மையாலும் குளுமையாலும் காக்கிறது , அதன் மீறிய சக்தியால் அழைக்கவும் செய்கிறது. தாய்மையும் ஒரு பபிரபஞ்ச அடிப்படை சகதியின் வடிவம்.  குந்தியுடனும், திரௌபதியுடனும் அந்த நூறு நாற்காலிகள் நாயடி தாயையும் இணைத்துக் கொண்டேன்.

நேற்று கபிலர் குளத்தில் குதித்து ஒரு அபாரமான இலக்கிய வழி தியான அனுபவம். ஒரு கார்டூன் படத்தை  பார்ப்பது போல இருந்தது.  முன்பு வியாசர் பாரதத்தின் தெற்கு வரை படர்ந்து நிலம் முடியும் இடத்தில் அவர் கண்ட முதற் சொல் இலக்கியம் . இப்போது கபிலர் ஆழ்ந்து மறு நுனி எழுந்து கண்ட சிந்தை தந்துவம். கிளையெனப் பரவுவது இலக்கியம் வேரென ஆழ்வது தத்துவம். 

காண்டவம் வெண்முரசு வாசகர்களுக்கு ஒரு சவால். 

கிருஷ்ணன்