Saturday, May 16, 2015

கதைவலை



ஜெ

இந்தப்புதியநாவலின் அமைப்பைப்பற்றி நீங்கள் எழுதிய குறிப்பிலேயே ஊகித்திருந்தேன். இந்த முதல் அத்தியாயமும் அதைத்தான் காட்டுகிறது. பிரம்மம் ஒரு பெரிய சிலந்தி. தன் ‘ரசத்தை’ எடுத்து அது கதைகளாக இந்த பிரபஞ்சத்தைக் கட்டியிருக்கிறது. கதைகளால் ஆன அந்த வலையை அவிழ்த்துப்பார்க்க அறிவால் முடியாது. கூடவே கதையைப்பின்னும் சூதர்களால்தான் முடியும் இல்லையா

அதேபோல இந்த நாவலும் ஒரு கதைப்பின்னல். அதை வாசகர்களும் சேர்ந்து பின்னவேண்டும் என்று அழைக்கிறீர்கள் என்று புரிகிறது  தயராகவே இருக்கிறோம். கதைவலை வரட்டும்

எஸ்