Thursday, May 28, 2015

காண்டவம்- எழுதுவது

அன்புள்ள ஜெ 

காண்டவம் - அன்னை சிலந்தியின் வலைக்கு ஈடாக இன்னொரு வலை என்பது எவ்வளவு பெரிய audacity !

பின் வந்த அத்தியாயங்களில் தட்சசீலம், நாகபுரி, மணிப்பூரகம் என்று இந்திய பெருநகரங்களின் தொல்வரலாறுகளும் நாகர்களின் தொன்மங்களும் மொழியும் கதைக்கோர்வையும் வெண்முரசின் வேறு எந்த பகுதிக்கும் சளைத்தவை அல்ல.

குறைந்தபட்சம் காண்டவத்தின் எழுதப்பட்ட பகுதிகளை வெண்முரசின் அதிகாரபூர்வமான ஏழாவது  பகுதி என்றாவது அந்தஸ்து அளித்து அறிவித்திருக்கலாம். பாவம் இப்போது அவை வெட்டப்பட்டு தனியாக இருப்பதை பார்க்க மனது கேட்கவில்லை. 

மது
 
அன்புள்ள மது
 
திரும்ப எழுதுவேன்என நினைக்கிறேன்
 
ஜெ