Thursday, May 28, 2015

எழுதியாகவேண்டிய கதை

அன்புள்ள ஜெ,

காண்டவம் முடித்துக்கொள்வது பற்றி நீங்கள் எழுதியது சிறிது வியப்பளித்தாலும் உங்கள் முடிவு சரியானதே. உங்கள் வாசர்கள் அனைவரும் இதனைப் புரிந்து கொள்வார்கள்.

"காண்டவம்’ காண்டவவனம் எரிந்ததை பற்றிய கதை. நாகர்களுக்கும் யாதவர்களுக்குமான போர். நாகங்களுக்கும் நெருப்புக்குமான போர்"  என்று அறிமுகத்தில் எழுதினீர்கள். இன்று வரை தொடரும் நாகர்கள் மீதான வன்முறை பற்றி உங்கள் மிகக் கூரான சமூக அரசியல் வரலாற்றுப் பார்வை காண்டவத்தில் வெளிவரும் என எதிர்பார்த்திருந்தேன். மகாபாரதக் காலம் முதல் இன்று வரை விளிம்பிலேயே இருக்கும் சமூகம். இந்திய இலக்கியத்தில் மிக மிகக் குறைவாக பேசப்பட்ட சமூகம். 

நாகர்களின் வலியும் வன்முமம் நீங்கள் எழுதியே ஆக வேண்டிய கதை ஜெ. இன்னொரு வெண்முரசு நாவலில் அது விரிவாக பேசப்படுமென எதிர் பார்கிறேன் 

நன்றிகள் 

சிவா