Tuesday, May 12, 2015

நூலின் வழியே

 
 
அன்பு ஜெ சார்,

வணக்கம்.
 
பிரயாகை கையெழுத்திடும்போது எங்களை நீங்கள் நினைத்துக்கொண்டதை படித்தபோது சந்தோஷமாயிருந்தது.

“முந்நூறில் ஒருவர்” - சந்திரசேகர் பதிவு படித்தபோது, கண்கள் நிறைந்தது.

அடுத்தமுறை இந்தியா வரும்போது (எப்போதென்று தெரியவில்லை) இயலுடன் வந்து உங்களை சந்திக்கவேண்டும் என்று ஆவலாயிருக்கிறது (உங்கள் அனுமதியுடன்).

குடும்பத்திற்கு அன்பு.
 
வெங்கடேஷ்
 
அன்புள்ள வெங்கடேஷ்
 
வரும்போது சந்திப்போம். ஆனால் சந்திக்கையில் பெரும்பாலும் புன்னகையும் தொடுகைகளும் மட்டும்தான் நிகழ்கின்றன. பேசவேண்டியவை எல்லாமே வெண்முரசிலேயே உள்ளன இல்லையா?
 
ஜெ