Thursday, May 21, 2015

நாகத்தீவின் கதை

அன்புள்ள ஆசிரியருக்கு;
 
காண் ட(ர)வம்-சென்ற நாவலில் நாகங்கள் குறைந்து இருந்தது .இந்த நாவலின் தொடக்கமே நாகங்களின் வரவால் நிறைந்துள்ளது.பிரமம் என்னும் சிலந்தி வஞ்சம் என்னும் நாகங்களை கொண்டு வலைபின்னுகிறது.காண்டவனத்தில் சாரங்க பறவை இருந்தது என்பதுமட்டுமே  தெரிந்த கதை.
 
வெண்முரசு அதன் முற்பிறவிகள் பற்றி வருவதேல்லாம் ஆச்சரிய படவைக்கிறது.அந்த கதைகள் கடந்த காலத்தில் குந்தியை நினைவுடுத்தினாலும்,எதிர் காலத்தில் திரௌபதியை காட்டுகிறது.தன் வஞ்சத்திற்காக தன் ஐந்து பிள்ளைகளை போர்களம் அனுப்பி இழக்கபோகிறாள்
 
ஜரிதை,மகாபலை,திரியை ஆகிய முவரின் குழைந்தைகளின் பெயர்களும் என்னை வியக்கவைத்தது,முதலில் குணங்களில்  தோன்றி,ஐம்புலங்களாக மாறி ,காலத்தை நிறைக்கிறது .
 
என்னை மிகவும் கவர்ந்தது மகாபலையின் கதைதான் ஐந்து பொறிகளை குறிக்கும் ஐந்து பிள்ளைகள்,பொதுவாக கண் தான்முதலில் எதையும் அறியும் பின்னறே பிற புலங்கள் அறியும்.இச்சை என்பது துண்டில் முள் புழுவாக ஆடிக்கொண்டிருக்க.ஆஷன் என்னும் கண் முதலில் போய் சிக்கிகொள்கிறது.
பின்னர் பிற நான்கு புலங்களும் பொய் சிக்கிக்கொள்கிறது,பின் தன் உயிரை(மாபலை)இழக்கிறது.
 
  அத்தியாயத்தின் தொடக்கத்தில் சொன்னது போல ஒவொரு சூதனும் கதையை முடிக்கும் போதும் மீண்டும் போய் தொடக்கதையே தொடுகிறது,ஒவ்வொரு நாளும் அத்தியத்தை முடித்தவுடன் ,மீண்டும் முதலிருந்து படிக்க வேண்டிவுள்ளது.
 
ஒரு சந்தேகம்,,நிலபரப்பில் நம் இந்தியா இருப்பது நாவலந்தீவு என்னும் ஜம்புதீவு. சாவரத்தீவு என்பது எப்பகுதி?
 
நன்றி
அன்புடன்
த.குணசேகரன்
 
 
அன்புள்ள குணசேகரன்

நாமிருப்பது நாவலந்தீவு. நாவல்தான் சம்ஸ்கிருதத்தில் ஜம்பு

ஜெ