Tuesday, May 19, 2015

பிடித்து விட்டேன் , இது திருமந்திரம்

 சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமிக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றுங் கலந்தவர் தாமே.
(ப. இ.) நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் என்று சொல்லப்படும் ஐங்கலையும் சேர்ந்தது. ஆகும் ஓமகுண்டம், ஐங்கலை என்பது ஐவகைத் திருவருளாற்றல்கள். நிறைந்த திசை விளக்கமும் அங்கே காணப்பெறும். பரந்த நிலமுதலிய ஐம்பூதவுண்மையும் அங்கே புலனாகும். இவற்றைத் திருநோக்கம் செய்வது செஞ்சுடர்ச் சிவபெருமான். உலகவுண்மையுணர்ந்து பற்றற்றவர் அச் சிவபெருமான் திருவடியிற் கலந்து இன்புறுவர்.
(அ. சி.) பாய்ந்த - பரந்த. காய்ந்தவர் - உலகத்தை வெறுத்தவர்.

கிருஷ்ணன்