Wednesday, May 27, 2015

காண்டவமும் இந்திரநீலமும்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

இந்திரநீலம் என்ற புதிய ஏழாவது நூலுக்கு பெயர் அற்புதம். இந்திரநீலம் உயர்ந்த வைரம், கவர்ந்தும் கனிந்தும் நிற்கும் அற்புதம் உடையது. கண்ணனாகியல நீலமும், அர்ஜுனனாகிய இந்திரனும் நட்பில் கலக்கும் பொருள் பொதிந்தது. இந்த நூலின் பெயரே அற்புதமாக உள்ளது. 

எனது அப்பன் முருகன் அன்னை வள்ளிநாயகியின் காதலில் கனிந்து மடல் எழுதும் நாளில் அன்னையின் ஓவியத்தை வரையும்போது அருணகிரி நாதர் சுவாமிகள் இப்படி சொல்கின்றார். 

இந்தர கோபமு மரகத வடிவமும்
இந்த்ர சாபமும் இருகுழையொடு பொரு
இந்திர நீலமும் மடலிடை எழுதிய பெருமாளே! -(கொந்துவார் குரவடியினும் -திருத்தணிகை திருப்புகழ்)

இந்திர நீலத்திற்கு வாழ்த்துக்கள். 

நன்றி 
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்