Thursday, May 28, 2015

நீலம் மீண்டும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இந்திரநீலம் அறிவிப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன். மழை பாடல் இரண்டாம் வாசிப்பு துவங்கி உள்ளேன்.
வெயிலுக்கு இதமாக இருக்கிறது.

சிவக்குமார்
சென்னை




அன்பின் குரு

வெண்முரசை மீண்டும் தொடங்க முடிந்ததற்கு இறையருளுக்கு நன்றி.
தொடர்ந்து இதே படைப்பூக்கத்துடன் இயங்க எல்லாம் வல்ல பேரருள் துணை நிற்கட்டும்.

நான் இந்தியப்பயணம் முடிந்து திரும்பி விட்டேன்,பின்பு பல்வலிக்கான சிகிச்சை,அதற்கான மருந்துகளின் பக்க விளைவு எனச்சற்று உடல் உபாதைகள்.

ஊட்டி கூட்டம் இனிதே முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி.அந்தக்கூட்டத்தில்
நீங்கள் தவறவிட்ட நண்பர் பட்டியலில்(இன்றைய பதிவு) என் பெயரைத்தேடி சற்றே ஏமாந்தேன்...

தங்கள் அமெரிக்க,கனடா பயணம் இனிதே அமைய அன்பு வாழ்த்துக்கள்
என்றும் பிரியமுடன்
சுசீலா