Tuesday, January 5, 2016

தொடக்கம்



வணக்கம் ஜெ,

நலமா?

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்து கொண்டது போன்ற மனநிலையை உருவாக்குகிறது உங்கள் தளத்தில் எழுதப்படும் கடிதங்கள்.ஒருமுறையாவது அதில் கலந்துகொள்ளும் ஆர்வத்தைக் கிளர்த்துகிறது. தனியாயாக வரநேருமே என்ற தடைதான் என்னை தூர இருக்கவைக்கிறது.தேவதச்சன் கவிதைகள் சார்ந்த கட்டுரைகள், நீங்கள் எழுதியதும்,பிறர் எழுதியதும் தேவதச்சனின் படைப்புலகை முழுமையன சித்திரத்தைக் காட்டியது. நன்றி.

வெய்யோனை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எப்போதுமே முதல் அத்தியாயம் சற்று சோர்வை உண்டாக்கினாலும், இரண்டாவது அத்தியாயத்திலிருந்து அது ஸ்பீட் கேரில் விரையும் நிலை முதல் அத்தியாயச் சோர்வை நிவர்த்தி செய்துவிடுகிறது. கர்ணனின் பிம்பம் மெல்ல மெல்ல விஸ்தரித்துக் கொண்டு போவது வாசிப்பு இன்பத்தை உண்டாக்குகிறது. காண்டீபத்தை இன்னும் வாசிக்கவில்லை. அதில் அர்ச்சுணனின் ஆளுமை கண்முன் படிமமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. வாசித்துவிடவேண்டும் இடை இடையே. 

நன்றி.
கோ.புண்ணியவான்.