Wednesday, March 23, 2016

நீலம் எனும் இடைவெளி






ஜெ

நீலம் ஒரு கனவு போல துரத்தித் துரத்தி வருகிறது. ஒவ்வொரு நாவல் முடிந்ததும் நீலத்திற்குள் சென்று வாசித்துவிட்டுத் திரும்புகிறேன். நீலத்தின் உணர்வுநிலை எல்லா நாவல்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக நீடிக்கிறது என நினைக்கிறேன். வெய்யோனில்கூட அது இருக்கிறது. திரௌபதியைப்பற்றி கர்ணன் நினைக்கும் இடங்களில் உள்ள மொழியின் பிரவாகம் அதைக் காட்டுகிறது

நீலம் கட்டற்ற மொழியக உள்ளது என முதலில் தோன்றியது. ஆனால் வாசிக்க வாசிக்க அது எண்ணி எண்ணி எழுதப்பட்டது என்ற எண்ணமும் வந்தது. அதன் சுருக்கம்தான் அதன் அழகு என்று இப்போது தோன்றுகிறது

செல்வராஜ்