Wednesday, March 23, 2016

இந்திரநீலம் - ஞானத்தின் பாதை



ஜெ

வெண்முரசின் நாவல்களில் இந்திரநீலத்தைத்தான் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டு வாசித்தேன். அதன் பலபகுதிகள் எனக்குப்புரியாமலோ வெளியிலோ இருந்தன. அதாவது என்ன செய்தி என்று புரிந்தது. ஆனால் உள்ளடக்கத்துக்கு அப்பாலுள்ள ஒன்று புரியவில்லை

சமீபத்தில் அஷ்டலட்சுமிகளைப்பற்றி ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கர்நாடக வைஷ்ணவத்தில் வைகானச ஆகமத்தில் உள்ள சில சம்பிரதாயங்களைப்பற்றிப் பேசினார். அவை வைஷ்ணவ தாந்த்ரீகம் என்று சொன்னார்.

அந்த விஷயங்கள் பல இந்திரநீலத்தைப்புரிந்துகொள்ள உதவின. உதாரணமாக சியமந்தக மணி கிருச்ஷ்ணன் என்னும் மாயாஸ்வரூபத்தின் பயணம் என்றால் அது எங்கெங்கே சென்று கடைசியில் கடலாழத்தில் மறைகிறது என்று பார்த்தபோது திடீரென்று ஒட்டுமொத்த இந்திரநீலத்தையே தொகுத்துப்பார்த்ததுபோல் இருந்தது

இன்னும் நிறைய வாசிக்கவேண்டும்

ஜெயகிருஷ்ணன்