Wednesday, March 2, 2016

அந்தப்பதற்றம்






அன்புள்ள ஜெ

வெண்முரசின் இப்பகுதிகள் படபடப்பை அளிக்கின்றன. என்ன நடக்கப்போகிறது என நன்றாகவே தெரியும். துரியோதனன் அவமதிக்கப்படுவான். ஆனாலும் படபடப்பு.
 அந்தப்பதற்றம்எப்படி வருகிறது என யோசித்துப்பார்த்தேன். ஊஞ்சல் அந்தப்பக்கமாகப்போகும் என தெரியும். நீங்கள் அதை இழுத்து இந்த எல்லைக்குக் கொண்டுவருகிறீர்கள். இந்த எல்லையில் வர வர அது மறுபக்கம் எவ்வளவு தூரம் போகும் என ஊகிக்க ஆரம்பிக்கிறோம். அதுதான் படபடப்பு

துரியோதனனின் நல்லெண்ணமும் அன்பும் அவர்கள் அஸ்தினபுரியில் வாழும் அன்பான வாழ்க்கையும் இவ்வளவு விரிவாக வந்திருப்பதனால்தான் இவ்வளவு அற்புதமாக இருக்கிறது என நினைக்கிறேன்

லட்சுமணன்