Thursday, March 3, 2016

இந்திரநீலம் வந்துசேர்ந்தது




அன்புள்ள ஜெ

இந்திரநீலம் வந்துசேர்ந்தது. வழக்கம்போல அற்புதமான கட்டமைப்பு கொண்ட நூல். படங்கள் இல்லையே என்ற ஏக்கம் எழுந்தது. ஆனாலும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டேன். இனிமேல் ஒருமுறை நிதானமாக வாசிக்கவேண்டும். ஒரு நூல் வருடக்கணக்காக இப்படி நம்மை மூழ்கடித்துவைத்திருப்பது ஆச்சரியம்தான். அதுவும் மிகமிகச் செறிவான நூல். துல்லியமான மொழிப்பிரக்ஞ்சையுடன் வாசிக்கவேண்டிய நூல்.

மீண்டும் வாசிக்கமுடியுமா என நினைப்பேன். ஆனால் ஒரு நாவல் முடிந்த இடைவெளியில் வேகமாக பதினைந்து நாட்களுக்குள் ஒரு முந்தைய நாவலை வாசித்துவிடுவேன். இரண்டாவது வாசிப்பு வேறு வகையானது. முழுக்க மூழ்கிக்கிடக்கமுடியும். பத்துநாளில் ஒரே மூச்சாக வாசிப்பேன். அது வேறு அனுபவம். நிறைய விஷயங்கள் அந்த வாசிப்பில்தான் தெரியவரும். கதையோட்டம் மறந்துவிடும். நிகழ்ச்சிகளின் டீடெயில்களில் கவனம் நிற்கும். நன்றி ஜெ. கிழக்கு பதிப்பகத்துக்குப் பாராட்டுகக்ள்

எஸ்