Wednesday, March 23, 2016

வெய்யோன் குழந்தைகள் வழியாக



ஜெ,

வெய்யோன் நாவலில் குழந்தைகளின் கதை தொடர்ச்சியாக வந்தபோது அது ஒரு பெரிய சிதறல் என்று எனக்குப்பட்டது. கர்ணனின் கதைக்குப்பதிலாக கௌரவர்களின் கதையாக அது ஆகிவிட்டது என்று தோன்றியது. ஆனால் இப்போது ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் அதன் பிரப்போர்ஷனும் அமைப்பும் மிகவும் நிறைவூட்டுவதாகவே இருக்கிறது. கர்ணனையே அந்தக்குழந்தைகளை வைத்துத்தான் புரிந்துகொள்ளமுடிகிறது

கிஷோர்


அன்புள்ள கிஷோர்

நண்பர் கடலூர் சீனு வெய்யோன் நாவலை குழந்தைகளைக்கொண்டே ஒரு வாசிப்பாக நிகழ்த்தினார் எனக்கே ஆச்சரியமாக இருந்தது

கர்ணனுக்குக் குழந்தை உருவாவதில் நாவல் தொடங்குகிறது. ஆனால் அது அவனை எவ்வகையிலும் பாதிப்பதில்லை

கௌரவர்குழந்தைகளுடன் அவன் கொள்ளும் நெருக்கம் நாவல் முழுக்க வருகிறது

கடைசியாக நாகர் குழந்தையை கையில் எடுத்து  ‘இவன் என் மகன்’ என அவன் சொல்லும் இடத்தில் நாவல் உச்சம் கொள்கிறது

ஜெ