Tuesday, March 29, 2016

கிருஷ்ண தாண்டவம்

 
 
ஜெயமோகன் சார், 

இந்திர நீலம் வாசித்து வருகிறேன்.கம்சனை கொல்ல குலத்தாரிடம் உறுதி பூணும் இடம், இந்த அளவுக்கு heroic entry யை இதுவரை மட்டும் இனிமேலும் வாசிக்க போவதில்லை. தாறுமாறான இடம் , செம செம, இதுக்கு முந்திய பக்கங்களில் வந்த  பாமை ஆமை எல்லாம் அடியோடு மறந்து போச்சுது, இந்த பகுதியையே மட்டுமே நினைந்து சில நாள் ஒத்திப் போட்டு தொடர எண்ணுகிறேன். 
வெண்முரசு முழுக்க கிருஷ்ண தாண்டவம் ஒங்கட்டும் .
மேலும் வெண் முரசு வரவுக்கு பிறகு அதன் உச்சங்கள் பற்றி  உங்களிடம் பேசுவதோ, கடிதம் எழுதுவதோ ஆயாசமாக உள்ளது.  ஆசிரியரை தொடுதல், கட்டி பிடித்தல் , முத்தம் அல்லது தூரத்தில் இருந்து அவரின் உடல் மொழியை ரசித்தல் இது தான் என்னைப் போன்ற பாமர வாசகனுக்கு சரியானதாக இருக்கும்

அன்புடன்
தினேஷ் நல்லசிவம்