Wednesday, March 23, 2016

சிறுவர்களிடம்



ஜெ

வெண்முரசின் சாகசக்காட்சிகளை நான் எப்போதுமே கொஞ்சம் தவிர்ப்பதுண்டு. அவை புராணகாலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். சமகாலத்தன்மை கொண்ட மனோநிலை சித்தரிப்புகளுடன் ஒட்டுவதில்லை என நினைப்பேன்

இந்த இடைவெளியில் அந்தப்போர்களை எல்லாம் வாசித்தேன். முதற்கனல் முதலே போர்க்களக்காட்சிகளை ஒருவகையில் உற்சாகமான ‘காமிக்’ தன்மையுடன் படைத்திருக்கிறீர்கல். அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

யதார்த்தமான உணர்ச்சிகள் கொண்ட பகுதிகளுக்கு சமானமாக இந்த மிகையான போர்க்காட்சிகளும் கலக்கப்பட்டிருக்கின்றன. அந்த கலவைதான் நாவலுக்கு ஒரு கனவுத்தன்மையை அளிக்கிறது என நினைக்கிறேன்

மனொ


அன்புள்ள மனோகர்

என் மனதில் இளமையில் விழுந்த ஒரு வரிதான் அது. என் வி கிருஷ்ணவாரியருடையது

கிளாஸிக் என்பது ஏதோ ஒரு வகையில் ஒரு குழந்தைக்கதையும்கூட. குழந்தைகளிடம் சொல்லக்கூடிய வடிவம், குழந்தைகளுக்குரிய கதையுலகம் அதற்குள் எங்கோ இருக்கும்

வெண்முரசு அடிப்படையில் ஒரு குழந்தைக்கதையாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். விரிவாக்கம் அதன் மேலே தான்

ஆகவே போர்க்களக் காட்சிகள், மோதல்காட்சிகள் எல்லாம் முழுக்கமுழுக்க சிறுவர் சாகசக்கதைகளே. மேலும் அன்றைய யதார்த்தமான போரை நம்மால் இன்றைக்கு விவரிக்கவும் முடியாது.


நீலம் விதிவிலக்கு
ஜெ