Monday, March 14, 2016

அந்த கதாயுதம்





அன்புள்ள ஜெ,

ஸ்தூனகர்ணன் வரும் அத்தியாயம் அருமை. வண்ணக்கடலில் பீமனால் அவமதிக்கப்பட்டதும் துரியோதனன் நேராகச் செல்வது ஸ்தூனகர்ணனிடம்தான். அங்கே அவனிடமிருந்த பெண்மை இல்லாமலாகி அவன் முழு ஆண்மகனாக ஆகிறான. அவன் கடுமையான அழகான மனிதனானான்.

ஆனால் ஸ்தூனகர்ணன் அளித்த கதாயிதத்தை அவன் ஆற்றுக்குள்ளே போட்டுவிட்டு வந்துவிட்டான். அது ஏன் என அப்போதே சந்தேகம் இருந்தது. அவன் இனி எனக்கு தெய்வங்களின் துணை தேவையில்லை என்று சொல்கிறான்.

அந்த கதாயுதம் காத்திருந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின் தேடிவந்திருக்கிறது. அதாவது நாம் தெய்வங்களை விட்டாலும் அவர்கள் நம்மை விடுவதில்லை. தேடிவந்துவிடுகிறார்கள்

இனி தெய்வங்களின் ஆடல்தான். கணிகர் வேறு காத்திருக்கிறார்

செல்வராஜ்