Thursday, March 10, 2016

மனநிறைவு



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலமறிய விழைவு.

வெய்யோன் மனநிறைவு தருகிறது. வெய்யோன் எங்கேயோ கர்ணனின் சுய வாழ்விலிருந்து தொடங்கி நூற்றுவரின் அன்பில் நெகிழ்ந்து, இறுதியில் மயநீர் மாளிகையில் ஒரு பெரும் திருப்பத்தில் சென்றடையும் என எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு நாவலையும் நீங்கள் வளர்த்தெடுக்கும் சரளம் வியப்பு.

ஏப்ரம் மேவில் சுட்டெரிக்க இருக்கும் வெய்யோனோடு, இந்த வெய்யோனையும் எங்களால் தாங்கி இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நாவலும் விஸ்வரூபமெடுக்கிறது. தங்கள் வெண்முரசால் இலக்கிய வாசகனானேன் என்பதே என் பெருமை.

நன்றி.
அன்புடன்
 கமலக்கண்ணன்.