Sunday, March 27, 2016

பெண்ணின் பேருரு




பன்னிரு படைக்களம் பெண்ணின் விஸ்வரூப தரிசனத்தோடு தொடங்கியிருக்கிறது. "பெண்ணின் அவையில் ஆண் விழுந்ததிலிருந்து ஆணின் அவையில் பெண் எழுவதுவரை" என்று நூல்குறித்த அறிவிப்பில் சொல்லியிருந்ததுபோல் பெண் எழுந்தாடும் சித்திரத்திலிருந்து நூல் தொடங்கியிருக்கிறது. அதிலும் தேவி பன்னிரு ஆதித்யர்களின் விடியலும் அந்தியும் இரவுமாக வர்ணிக்கப்படுகிறாள். வெய்யோனின் இறுதியில் கர்ணன் பூண்ட வஞ்சத்தின் காரணமாக இனிமேல் கதை கதிரவனும் கொற்றவையும் ஆடும் களமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அக்களம் குறித்த தொடக்கம் வருணன், சூரியன், சகஸ்ராம்சு, தாதா, தபனன், சவிதா, கபஸ்தி, ரவி, பர்ஜன்யன், திருஷ்டா, விஷ்ணு, என்ற பன்னிரு ஆதித்யர்களைச் சூடிநிற்கும் அன்னையாக அமைந்திருப்பது சிறப்பு. களம் விரியக் காத்திருக்கிறேன்.

திருமூலநாதன்