Saturday, March 12, 2016

வெய்யோனின் மையம்






ஜெ,

வெய்யோனை தொகுத்துக்கொள்ள கீழ்க்கண்ட புள்ளிகளை கவனிக்கவேண்டும் என நினைக்கிறேன். இப்படி எல்லா நாவல்களையும் ஒரு மையச்சரடைக்கொண்டு தொகுத்துக்கொள்வது என் வழக்கம்.

1 பரசுராமருக்கும் கர்ணனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை. அதைச் சொல்லியபடித்தான் நாவல் ஆரம்பிக்கிறது. பரசுராமர் அன்னையைக் கொன்றவர். அந்தக்கசப்பு அவரிடம் இருந்துகொண்டே இருக்கிறது. ரேணுகா- பரசுராமர் என்ற ஒரு கதை குந்தி- கர்ணன் என இருக்கிறது

2 திரௌபதிக்கும் குந்திக்கும் கர்ணன் போட்டுக்கொள்ளும் ஒற்றுமை. ஒரு கனவில் ரேணுகாவாக திரௌபதியை கர்ணன் நினைக்கிறான் என்பதை கவனிக்கவேண்டும்

3 பரசுராமர் ஷத்ரியர்களுக்கு எதிரான போரை நடத்தியவர். பழங்குடிகளுக்காக போரிட்டு அவர்களின் அரசை உருவாக்கியவர்/ கர்ணன் செய்யப்போவதும் அதைத்தான். அவன் நாகர்களுக்காகப்போராடப்போகிறான்

வெண்முரசு நாவல்கள் தொடங்கும் இடம் முக்கியமானது. எப்போதுமே நாவல்கள் அந்த மையத்தைச் சரியாக வந்தடைந்துவிடுவது வழக்கம்

கருணாகரன்