Sunday, March 6, 2016

மெல்லிய ஏளனம்

 
 
உயரன்பு ஜெ,

பீஷ்மர் காட்டியது மெல்லிய ஏளனம். சிதறடித்து துடித்தது அம்பையின் காதல்.

எரிமகள் காட்டியதும் மெல்லிய ஏளனம். வேட்டையாடப்பட்டது துரியனின் பேரன்பு.

"மெல்லிய ஏளனம்" எவ்வளவு கொடியது!!!

கடைசி ஆறு பத்திகளையும் விழிகளில் நடுக்கங்களில்லாமல் வாசிக்க முடியவில்லை.

"மீண்டும் விழுந்துவிடுவேன்" என்று துரியன் உரைக்கையில் வந்த துயர் அடுத்த பத்து நிமிடங்களுக்கு விழிகளைத் திறக்க விடவில்லை.

அரசன்