Saturday, March 19, 2016

கதைகளின் கதை





அன்புள்ள ஜெ

வெண்முகில்நகரம் வாசித்துக்கொண்டிருக்கும்போதுதான் உங்கள் கட்டுரை ஒன்றை இணையதளத்திலே வாசித்தேன். நாவல்களை நாவல்களால் ஊடுருவும் ஒரு கலையாக உங்கள் நாவலைச் சொல்லியிருந்தீர்கள். அதைவாசித்தபோது அந்த ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது. வெண்முகில்நகரம் ஒரு மையக்கதையை நேர் குறுக்காக கடக்கும் ஏராளமான குட்டிக்குட்டிக்கதைகளால் ஆனது. அந்தவடிவமே ஆரம்பத்தில் கொஞ்சம் தடையாக இருந்தது. கதைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து கிடப்பதைப்போலத் தோன்றியது. ஆனால் இப்போது வாசிக்கும்போது கதைகளின் அந்தப்பின்னல்தான் கதைகளை நாவலாக இணைக்கிறது என நினைத்துக்கொண்டேன்

சரவணன்