Tuesday, November 1, 2016

சிவமேயாம்'




அன்பு ஜெமோ சார்,
               

சண்முகவேலின் ஓவியச் சிறப்பை எழுதியிருந்தார் ஒருவர். ஆம் சிவமூலிகையால் சிவந்த கண்களையும் காண முடிகிறது. வெண்முரசை வாசிக்கும் முதல் வாசகர்கள் எனும் பேறு பெற்றவர்களல்லவா சண்முகவேலும், மணிகண்டனும்.
                      
  வடமொழியில் கேட்டு, படித்து திளைத்ததைத் தூய தமிழிலே அனுபவிக்கும் இன்பத்தை நல்குவது வெண்முரசின் தனிச் சிறப்புகளுள் ஒன்று. ''அகம் பிரம்மாஸ்மி' என்பது 'சிவமேயாம்' என்றாகுதல்,சிலிர்க்கிறது.

இரா.சிவமீனாட்சிசெல்லையா.