Tuesday, December 12, 2017

காத்திருப்பு


அன்புள்ள ஜெ

எழுதழல் அம்புகளை ஏந்திக் காத்துநின்றிருக்கும் விற்களை வந்தடைந்தபோது ஒரு பெரிய வட்டம் சுற்றி முடிவடைந்துவிட்டது போல உணர்ந்தேன். அந்த விற்கள் பிரதீபரின் காலத்தில் அமைக்கப்பட்டவை. விதுரர் அவற்றைப் பார்க்கும்போதே அவருடைய சின்னவயதிலேயே அவற்றைப்பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார். [விதுரரை எல்லாம் சின்னப்பையனாகப் பார்த்திருக்கிரோம் என்பதே ஆச்சரியம்]

அதாவது இந்தப்பிரச்ச்னைகள் எவையும் எழுவதற்கு முன்னரே அவை உருவாகிவிட்டன. அவை தலைமுறை தலைமுறையாகக் காத்திருக்கின்றன.


மகாலிங்கம்