Tuesday, December 5, 2017

இரண்டு குருதிகள்



அன்புள்ள ஜெ

அம்பையின் குருதிவெறியில் எழுதழல் ஆரம்பிக்கிறது. அஸ்தினபுரியில் அணையாத வஞ்சத்துடன் நுழையும் குந்தி அதைக் காண்கிறாள். அதே வஞ்சத்துடன் மாயை இங்கே காத்திருப்பதில் நாவல் முடிகிறது. ஆனால் அதைக்காணாமல் குந்தி கண்கலைமூடிக்கொள்கிறாள். அவள் மனசாட்சியாகிய தோழிதான் அதைப்பார்க்கிறாள். குருதியில் தொடங்கி குருதியில் முடிகிறது நாவல். குருதி அணையாமல் காத்திருக்கிறது. அம்பையின் வஞ்சம் திரௌபதியின் ஆழ்மனமாகிய மாயையில் குடிகொள்கிறது. இரண்டு ரத்தபலிகள். ஒருபலி காட்டப்படுகிறது. இன்னொன்று உணர்த்தப்படுகிறது


செல்வா