Tuesday, August 15, 2017

வெண்முரசு அல்லாத திருதராஷ்டிரன்



 


நூல் இரண்டுமழைப்பாடல் 37 ல் இருக்கிறேன். நான் அறிந்த ஒரே மஹாபாரதம் வெண்முரசு மட்டுமே இதற்கு முன் மஹாபாரதம் என்பது கௌரவர்கள் பாண்டவர்கள் இடையே குருஷேத்ரம் என்னும் இடத்தில் நடந்த போர் என்பதை தாண்டி எந்த சித்திரமும் எனக்கு இல்லை. வெண்முரசு வாசிப்புக்காக மஹாபாரதம் பற்றிய மற்ற படைப்புகளை வாசித்து வந்த போது "கதா காலம் - தேவகாந்தன்" படிக்க நேர்ந்தது.  இதில் வரும் திருதராஷ்டிரனை எவ்வளவு யோசித்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, முதல் இரவில் தட்டு தடுமாறி போய் அமர்ந்து, காந்தாரி இருப்பதை அவளை பேசவைத்து அறிகிறான். ஏன் என்று தெரியவில்லை இதை வாசித்ததும் சரியான கோபம் வருகிறது. எனக்கு வெண்முரசு அளித்த திருதராஷ்டிரன் சுத்த வீரம் சற்று முரடண் (வாசித்த வரை) பீஷ்மரையே..... துவந்தயுத்தம் செய்ய அழைத்து சண்டையிட்டவன். வேழம் போல உடல் கொண்டவன் காந்தாரியை மணக்க தடை வந்தபொழுது அனைவரையும் துவம்சம் செய்து தன்னந்தனியாக காந்தாரியோடு மீண்ட கீரோ. கண்களை மூடிக் கொண்டு செவி, நாசி வழியாக எதையாவது உணர முடிகிறதா என்று முயன்று பார்கிறேன், அவ்வளவு ஆழமாக திருதராஷ்டிரனை என்னுள் பதியவைத்துவிட்டது வெண்முரசு. இனி வேறு சித்திரம் கொண்ட திருதராஷ்டிரனை ஏற்க இயலாது

ஏழுமலை