Friday, August 11, 2017

தமயந்தி



அன்பு ஜெமோ சார்,
          
மணத்தன்னேற்புக்கு முன்பே தமயந்தி கடக்க விழைந்தது, ஏறிக் கொண்டே சென்ற அகவையால் சேடியர் தொடங்கி அனைவரது நோக்கிலும்  உணர்ந்த நெருங்கும் முதுமையை.  அவளின் மாற்றுரு முதுமகள்.
             
  நளன் கடக்க விழைந்ததோ தமயந்தியினும்  சிறியவன், அவளின் பெருந் தோளுக்கு இணையான பேருடலற்றவன் என்பதை.ஆக நளனின் மாற்றுரு குள்ளன்.

இரா.சிவமீனாட்சிசெல்லையா.