Tuesday, August 22, 2017

கிளிஞ்சல்



அன்புள்ள ஆசிரியருக்கு


இன்றைய வெண்முரசு மிகவும் அருமையாக உள்ளது.
"உள்ளத்தில் இசையோகிக்கு எப்பொருளும் இசைக்கலமே என்பார்கள். நான் உங்கள் கைகளில் வெறும் கிளிஞ்சல்."
மிக அருமையான வரிகள் தன் துறை சார்ந்து எழும்போது உணரும் வரிகள். அல்லது தன் சுதர்மத்தை உணரும் தருணம்.

பின் உத்திரன் அரண் நுழையும் காட்சி மிகவும் அருமையான வர்ணனை. சில நாட்கள் முன் இளையாராஜாவின் "யாருக்கு எழுதுவது" படித்தேன் அதில் ஒரு இடத்தில் அவருடைய வெற்றி எப்படி பார்க்க படுகிறது என்று கூரியிருப்பார். அந்த கனத்தில் அவருடைய மன நிலை உத்திரனின் வாள் கொண்டு அனைவரையும் வெட்டி வீழ்த்தும் மன நிலை போல் உள்ளது. இதை ஒரு குழும உளவியல் என்று எடுத்துகொள்ள முடியுமா கண்டிப்பாக இல்லை நம்மை சூழ்ந்து உள்ள ஒவ்வொருவரின் உளமும் அதுவே இல்லையா!

விராடரே மிக அந்தரங்கமாக அதையே விரும்புகிறார் இல்லையா அவனின் தாயும் இதையே விரும்புகிரார் இல்லையா

போருக்கு முன் இருந்த உத்திரன் இப்பொது இல்லை. சென்ற அத்தியாங்களில் வெளிப்பட்ட கோழை உத்திரன் இல்லை. அப்படி பார்த்தால் விராடர் இந்த தருணத்தை விட்டுவிட்டார். அந்த பாய்ச்சல் உத்திரனுக்கு கிடைத்து விட்டதே என்றெ மனம் குமைகிறார். சைந்தரி அவரிடம் பேசும்போது அவரின் எண்ணம் இப்படி என்று எனக்கு தோன்றியது.

திருமலை