Monday, August 14, 2017

புஷ்கரனின் எழுச்சி



அன்புள்ள ஜெமோ

புஷ்கரனின் எழுச்சியையும் அதன்பின்னால் உள்ள உளவியலையும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். புஷ்கரன் அவ்வளவு கள்ளமற்றவனாக இருந்தமையால்தான் அவன் அப்படி ஒரு குரூரமானவனாக எழுச்சி அடைந்தான் என நினைக்கிறேன். நெப்போலியன் அப்படித்தான் இருந்திருப்பான். மிக எளிமையானவன். குள்ளமானவன். இட்லர் சின்னவயதில் திக்குவாய் இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் நல்லவனாக இருந்திப்பான் என்பார்கள். அவன் எப்படி சாதாரணர்களின் மனதிலுள்ள எல்லா தீமைகளையும் புரிந்துகொள்கிறான்? ஏனென்றால் அவன் சாமானியர்களின் மனதிலுள்ள தீமைகளின் மூர்த்தரூபமாக இருக்கிறான். அவனால் எல்லாவற்றையும் நுட்பமாகப்புரிந்துகொள்ள முடியும்

சத்யா