Friday, August 18, 2017

யோகியர் அறியும் இருள்






ஜெ

இன்றைய அத்தியாயத்தில் முக்தன் விண்மீனைப்பார்க்கும் இடம் வருவது நுட்பமானது. அவன் கரவுக்காட்டில் காவலனாக இருந்ததே மறந்துவிட்டது. அங்கே மீண்டும் சென்று தொடர்பு கொள்கிறது கதை. இந்த யூனிட்டிதான் வெண்முரசின் பலம். முக்தனின் பார்வையில் விண்மீன்கள் அர்த்தமிழப்பதும் அதற்கு அந்த கஞ்சாக்காரர் அளிக்கும் விளக்கமும் பயமுறுத்துபவை. அவர் சொல்வது மரணத்தைப்பற்றியா அர்த்தமில்லாமையைப்பற்றியா. நீங்கள் சிலசமயம் யோகியர் அறியும் இருள் என்பீர்கள். அதைப்பற்றியா? ஆனால் போருக்குப்போவதற்கு முன் அவன் அதை உணர்கிறான். போரில் அவன் மீளமாட்டான் என்பதை இப்போதே இதிலிருந்தே உணரமுடிகிறது

மனோகர்