Tuesday, August 8, 2017

புஷ்கரனின் உருமாற்றம்





அன்புள்ள ஜெ,
புஷ்கரனின் உருமாற்றம் திகைக்க வைக்கிறது. ஆனால் யோசித்துப்பார்த்தால் அதுவே இயல்பு என்றும் தோன்றுகிறது. மிகப்பெரிய கொலைகாரர்கள், கொடூரமான ஆட்சியாளர்கள் எல்லாருமே ஒருவகையில் தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். கோழைகள். அவமதிப்புக்கு எதிராக தங்களை வீம்பாகப் பெருக்கிக் கொண்டவர்கள். நெப்போலியனும் ஸ்டாலினும் அத்தனை குள்ளமாக இல்லை என்றால் அப்படி இருந்திருக்கமாட்டார்கள் என்று சொல் உண்டு.

ஆனாலும் அப்படி ஒரு இனிமையான இளைஞனாக இருந்தவன் மெல்லமெல்ல உருமாறி குரூரமானவனாக ஆகிக்கொண்டே செல்வதைக் காண ஒரு பதற்றம்தான் ஏற்படுகிறது. மனிதன் செய்வதெல்லாமே செயல் அல்ல எதிர்வினைகள்தான் என்று ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரு உரையிலே சொல்கிறார். அது ஞாபகம் வந்தது

சத்யமூர்த்தி