Monday, August 14, 2017

பேசுபொருள்






அன்புள்ள ஜெ வணக்கம்

ராகவராமன் வில்லால் அரசியலை அறிந்தான். அவன் எதிர்நின்ற ராவணப்பிரபுவோ வீணையால் அதை அறிந்தான்.”

இந்த உரையாடலில் ஒரு வித மயக்கம் தோன்றுகின்றது. சரிநிகர் ஏற்படவில்லையோ என்று தோன்றுகிறது. மீண்டும் பாருங்கள்

அரசியலை என்பதை விடுத்து பிரமத்தை அல்லது மெய்மையை அல்லது பிரபஞ்சத்தை அல்லது உலகை என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

இங்கு அரசியல் பேசுபொருள் என்பதால் நீங்கள் அரசியலை என்று சுட்டுகின்றீர்கள் போலும். அரசியல் ஒரு பகுதியாக நின்று மயக்குகின்றது

அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்


அன்புள்ள மாணிக்கவேல்

அரசியலை என்பதே சரியானது. பிரம்மத்தையும் மெய்மையையும் அவர்கள் அதனூடாக அறிந்தார்கள் எனச் சொல்லமுடியுமா என்ன

ஜெ