Wednesday, August 30, 2017

ஒவ்வொன்றும் பிறிதொன்றே




ஜெ
நீர்க்கோலம் முடிந்ததும் அதன் முதல் அத்தியாயத்தை எடுத்துப்படித்தேன். எல்லா நாவல்கள் முடிந்ததும் அதன் முதல்பகுதியை வாசிப்பது என் வழக்கம். எனேன்றால் நாவலின் ஒருமை அப்போது தெரியும். பெரும்பாலும் முதல் அத்தியாயத்திலேயே நாவல் ஒட்டுமொத்தமாகத் தெரிந்துவிடும்

அந்த யானை விழிகளுக்கு அப்பாற்பட்ட
வெண்வடிவொன்றின் கருநிழல்
இந்த வெண்கொக்கின் மெய்வடிவும் கரியது.
ஒவ்வொன்றும் பிறிதொன்றே என்றறிக!

என்ற வரி பிருஹத்பலனிடம் சூரியன் சொல்வது. அதைத்தான் மொத்த நீர்க்கோலத்திலும் பார்த்தோம். ஒரு பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. ஒரு சில வரிகளில் ஒரு கருவை அடைந்துவிட்டு அதைத்தான் விரிவாக்கம் செய்கிறீர்கள் என நினைக்கிறேன். பீம்சேன் ஜோஷி  முதலில் முனகாலாக ராகத்தை கோடிகாட்டுவார். சுவையறிந்தவர்கள் அப்போதே ஆகா போட்டுவிடுவார்கள். அதன்பிறகுதான் மணிக்கணக்காக ஆலாபனம்

சுவாமி