Monday, August 7, 2017

கூந்தல்





ஜெ
ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் அது பொருத்தமாகக் கையாளப்பட்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது. பாஞ்சாலி அவ்வளவு கம்பீரமானவள். அப்படியென்றால் அவள் யார் என்று கேட்காமலிருக்கமாட்டார்கள். அவள் கூந்தலைவேரு முடியமாட்டாள். ஆனால் கதையில் அதையே அவளுடைய தலைமறைவுக்கான காரணமாக ஆக்கி அதை நன்றாக நியாயப்படுத்தினீர்கள். அது கைம்பெண்களுக்கான நெறி. அவள் என்னை மணந்த பின்னரே முடிசுற்றிக்கட்டி மலர்சூடுவாள்என்று கீசகன் சொல்லும் இடம் உண்மையில் நுட்பமானது



எஸ்.சதாசிவம்