Tuesday, August 8, 2017

மக்கள்வெறி






அன்புள்ள ஜெ


நிஷதபுரியில் மக்கள் அத்தனை வெறிகொண்டு எதைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். அவர்கள் கொண்டாடுவது தர்மத்தில் இருந்து விடுதலை அடைவதைத்தான். கலவரங்கலிலே இதைக் காணலாம். நான் டெல்லி கலவரத்திலே நேரில் பார்த்தேன். எந்த அநீதியைவேண்டுமென்றாலும் செய்யலாம் நாம் தனியாக இல்லை. எல்லாரும் ஒன்றே என்று நினைக்கிறார்கல். அதை க்கொண்டாடுகிறார்கள். நடனமிட்டுக்கொண்டும் வெறியுடன் கூச்சலிட்டுக்கொண்டும் சின்னப்பையன்கள் கத்தியுடனும் கடப்பாரையுடனும் அலைந்தார்கள். அவர்களெல்லாம் இன்றைக்கு நடுவயதாகி பிள்ளைக்குட்டிகளுடன் வாழ்வார்கள். அவர்களில் சிலர் நாலைந்துகொலகூட செய்திருப்பார்கள். எல்லாவற்றையும் மறந்திருப்பார்கல். அல்லது பெருமையாகக்கூட சொல்லிக்கொண்டிருப்பார்கள். நீங்கள் காட்டும் அந்த மக்கள்வெறி அச்சமூட்டுகிறது

ஸ்ரீனிவாசன்