Thursday, August 31, 2017

சொல்லவேகூடாது






அன்புள்ள ஜெ

அர்ஜுனன் உத்தரையிடம் சங்கடமும் குழப்பமுமாகப் பேசுமிடம் நுட்பமானது. அங்கே ஒரு வரிதான் சொல்லவேகூடாது. அபிமன்யூ தானே என்று. அதைச் சொல்வது மிகவும் தப்பான அர்த்தம் அளிப்பது மட்டும் அல்ல அந்தப்பெண்ணின் அந்தரங்கத்தை கொஞ்சம் அவமானம் பண்ணுவதும்கூட. அதைச் சொல்லக்கூடாது. ஆனால் சொல்லக்கூடாது என்று அறிந்து தவிர்க்கும் ஆண்கள் அனேகமாக இல்லை. அவர்கள் ஏன் சொல்கிரார்கள் என்பது பெரிய மர்மமான விஷயம்தான்

எஸ்