Tuesday, August 22, 2017

முக்தி



அன்பு ஜெமோ சார்,
      
               கர்ணன் குந்திக்கும்,  பாண்டவர்களுக்கும்,  திரௌபதிக்கும் உலரத் துடைக்க முடியாத உறவு. அர்ஜுனனுக்கு குந்தியிடமும், திரௌபதியிடமும் பிறிதொன்றிலா நேசத்தைப் பெற முடியாமல் பிறிதொன்றாய் இடைநிற்பவன். அர்ஜுனன் களம் பல கண்டு உலகியல் வெற்றி பல பெற்றாலும் நிறைவுறாமல் தேடலுடன் பெண்களில் உழல்வதும் ,  செய்யும் பயணங்களும் ... அனைத்துமே கர்ணனைக் கடக்கத்தானே.

                  கர்ணனைக் கடக்க அவன் பற்றிக் கொள்ளும் இடம்தானே இளையயாதவன்.

       இதோ ஓராண்டாய் இவனின் பெரும் தாசனாய் இருந்தவன் மரணத் தருவாயில் அவனால் ஆட்கொள்ளப்பட்டு விழிமலர வியந்திறக்கிறான்.
                    
இதழ் கோண அவன் புன்னகைப்பது உத்தரனைப் பார்த்து மட்டுமா?
             
மற்றுமொரு கோணத்தில் சைரந்திரியின் சொல்படி வலவனின் ஒரு துளி சம்பவனென்றால்  அர்ஜுனனின் ஒரு துளிதானே முக்தன். அவனின் முக்தி கர்ணனின் அம்பினாலா?  விரிந்து கொண்டே செல்கிறது.


இரா.சிவமீனாட்சிசெல்லையா