Tuesday, August 29, 2017

வெண்முரசு கலந்துரையாடல்



அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,


                                                                           இந்த மாத (ஆகஸ்ட்) சென்னை வெண்முரசு கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. இரண்டாவது முறையாக அதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நிகழ்ந்துக் கொண்டுயிருக்கும் நீா்க்கோலமே தலைப்பாக இருந்தது. திரு. மாாிராஜ் அவா்கள் பேசினாா். நல்ல பேச்சு. ஒரு நல்ல உரையாடலாகவே நிகழ்ந்தது. இன்னும் நீா்கோலத்தை தொடாத எனக்கு கரவுகாடு பற்றி ஒரு கனவு உதித்துவிட்டது. அதுவும் அந்த பகுதியை காடு நாவலோடு ஒப்பிட்டு திரு. காளிபிரசாத் அவா்கள் பேசிய பிறகு தீவிரமாகி விட்டது. மகாபாரதம் நிகழ்ந்த காலத்தின் போது இருந்த நில அமைப்பை இப்போது உள்ள நில அமைப்போடு ஒப்பிட்டு பாா்க்கலகாது என்றும் பல்லவா்கள் அங்கே எப்படி வந்தாா்கள் என்றும் ஏற்றுக்கொள்ளும்படியான தகவல்களுடன் உரையாடினாா்கள். அனைத்தையும் விட எல்லாவற்றையும் புன்னகையோடு செய்ய முடிகிறது.  திரு. செளந்தா் அவா்களின் தந்தையாா் மறைந்து சில தினங்களே ஆகி இருந்த நிலையில் அவாின் பங்களிப்பும் உபசாிப்பும் வியப்பில் ஆழ்த்தின. நண்பா்க்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தொிவித்துக் கொள்கிறேன்.  நண்பா்கள் அனைவா்க்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.....


மிக்க அன்புடன்,
தேவி.  க
ஆவடி.